87 வயதிலும் கிரிக்கெட் மீது தீராத காதல்…காலமானார் சாருலதா….பிசிசிஜ இரங்கல்

Published by
kavitha
  • 87 வயதிலும்  கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட  சாருலதா படேல் காலமானார்.
  • ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்  என்று பிசிசிஜ இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 87 வயது பாட்டி சாருலதா படேல்.லண்டனில் தற்போது வசித்து வருகிறார்.கிரிக்கெட்டின் மீது தீவிர காதல் கொண்ட இவர் இந்திய கிரிக்கெட் அணியை மிகவும் நேசித்தார். இதனை வெளிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் இந்திய அணி கலந்து கொள்கின்ற அனைத்து போட்டிகளையும் கண்டு ரசித்தார். இந்நிலையில் இந்திய அணியின் தீவிர ரசிகையான சாருலதா படேல் காலமானார்.

சாருலதா படேலின் மறைவுக்கு  பிசிசிஐ   தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி குறிப்பில் இந்திய அணியின் சிறந்த ரசிகையான சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்து இருப்பார், விளையாட்டின் மீதான அவருடைய ஆர்வம் நம்மை ஊக்குவிக்கும். மேலும் அவரின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளது.

சாருலதா படேல் அவ்வளவு சாதராண ரசிகை கிடையாது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறிய போட்டியை உற்சாகமாக கண்டுகளித்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவராக 87 வயதில் வீல்சேரிலே மைதானத்திற்கு வந்து

‘தம்’ கட்டி ஊதுகுழலை ஊதியபடி, முகத்தில் மூவர்ண நிறத்தை தீட்டி கையில் தேசிய கொடியுடன் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் ரன் அடிக்கும் போதும், விக்கெட்டை வீழ்த்திய போதும் சாருலாதா கொண்டாடிய விதம் சக ரசிகர்களை மட்டுமின்றி இந்திய வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.அப்போது  சமூக  வலைதளங்களில் சாருலாதா படேலின் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டன.

மூச்சு விட தடுமாறும் வயதில் தம் கட்டி தன் கிரிக்கெட்டின் மீது வைத்த அதீத காதலை அவர் வெளிப்படுத்திய கண்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் சாருலதா படேலை சந்தித்து ஆசி பெற்றனர்.

 

அப்போது மூதாட்டி, அவர்களுக்கு முத்தமிட்டு தனது ஆசி கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BCCI/status/1217685375872684032
Published by
kavitha

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

8 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

8 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

9 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

11 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

11 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

12 hours ago