87 வயதிலும் கிரிக்கெட் மீது தீராத காதல்…காலமானார் சாருலதா….பிசிசிஜ இரங்கல்

Published by
kavitha
  • 87 வயதிலும்  கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட  சாருலதா படேல் காலமானார்.
  • ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்  என்று பிசிசிஜ இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 87 வயது பாட்டி சாருலதா படேல்.லண்டனில் தற்போது வசித்து வருகிறார்.கிரிக்கெட்டின் மீது தீவிர காதல் கொண்ட இவர் இந்திய கிரிக்கெட் அணியை மிகவும் நேசித்தார். இதனை வெளிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் இந்திய அணி கலந்து கொள்கின்ற அனைத்து போட்டிகளையும் கண்டு ரசித்தார். இந்நிலையில் இந்திய அணியின் தீவிர ரசிகையான சாருலதா படேல் காலமானார்.

சாருலதா படேலின் மறைவுக்கு  பிசிசிஐ   தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி குறிப்பில் இந்திய அணியின் சிறந்த ரசிகையான சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்து இருப்பார், விளையாட்டின் மீதான அவருடைய ஆர்வம் நம்மை ஊக்குவிக்கும். மேலும் அவரின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளது.

சாருலதா படேல் அவ்வளவு சாதராண ரசிகை கிடையாது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறிய போட்டியை உற்சாகமாக கண்டுகளித்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவராக 87 வயதில் வீல்சேரிலே மைதானத்திற்கு வந்து

‘தம்’ கட்டி ஊதுகுழலை ஊதியபடி, முகத்தில் மூவர்ண நிறத்தை தீட்டி கையில் தேசிய கொடியுடன் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் ரன் அடிக்கும் போதும், விக்கெட்டை வீழ்த்திய போதும் சாருலாதா கொண்டாடிய விதம் சக ரசிகர்களை மட்டுமின்றி இந்திய வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.அப்போது  சமூக  வலைதளங்களில் சாருலாதா படேலின் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டன.

மூச்சு விட தடுமாறும் வயதில் தம் கட்டி தன் கிரிக்கெட்டின் மீது வைத்த அதீத காதலை அவர் வெளிப்படுத்திய கண்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் சாருலதா படேலை சந்தித்து ஆசி பெற்றனர்.

 

அப்போது மூதாட்டி, அவர்களுக்கு முத்தமிட்டு தனது ஆசி கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BCCI/status/1217685375872684032
Published by
kavitha

Recent Posts

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

2 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

3 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

4 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

5 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

6 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

6 hours ago