கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிசிசிஐ தோனியை சரியான முறையில் நடத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நான் எப்போதும் நேர்மறையான விஷயங்களை பேசுவேன். ஆனால், தற்போது இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பு பிசிசிஐயின் தோல்வி. அவரை போன்ற ஒரு பெரிய வீரர் சரியான வழியில் நடத்தபடவில்லை. தோனியின் ஓய்வு இப்படி நடந்து இருக்க கூடாது. இந்த வார்த்தைகள் எனது இதயத்தில் இருந்து நேராக வருகிறது. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் நினைத்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். இதற்காக பிசிசிஐக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோனி அடுத்து எடுக்கும் முயற்சிகளுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார். தோனியின் ஒவ்வொரு ரசிகருக்கும் வருத்தம் இருக்கும். அது என்னவென்றால், கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.’ என சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…