Hardik Pandya [file image]
ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மும்பையில் விமானநிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை மக்கள் கூட்டம் கடல் அலை போல் காட்சியளித்து வருகிறது.
ஆனால், வான்கடே மைதானத்தில் தற்போது தீடிரென சற்று முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் மாலை சரியாக 5 மணி அளவில் தொடங்கவிருந்த திறந்த வெளி பேருந்து வெற்றி ஊர்வலமானது சற்று தள்ளி சென்றுள்ளது. இந்நிலையில், விமானநிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை இந்திய ரசிகர்கள், வெற்றி வீரர்களை வரவேற்க குவிந்துள்ளனர்.
அதே நேரம் வான்கடே மைதானம் முழுவதும் ரசிகர்கள் குவிந்து ‘இந்தியா இந்தியா’ எனவும் ‘ரோஹித் ரோஹித்’ எனவும் முழங்கி வருகின்றனர். இதற்கிடையில், மைதானத்த்தில் உள்ள ரசிகர்கள் அதனுடன் ‘ ஹர்திக் ஹர்திக்’ என முழங்கி வருகின்றனர். இது சற்று வியப்படைய வைத்துள்ளது. இதற்கான காரணம் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயலாற்றினார்.
அந்த தொடரில் ஒரு கேப்டனாக அவர் நடந்து கொண்ட முறை அவரது ரசிகர்களையே வெறுப்பேற்றியதென்றே கூறலாம். அந்த தொடரில் மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வான்கடே மைதானத்திலேயே அவரை அவரது ரசிகர்களே அவமானப்படுத்தினார்கள்.
ஆனால் நடைபெற்ற இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அப்படியே அதற்கு மாறாக ஒரு துணை கேப்டனாக பொறுப்புடன் விளையாடி அவரது பங்கை சிறப்பாக ஆற்றினார் ஹர்திக் பாண்டியா. இதனால், அன்று அவரை கேலி செய்த மும்பை மைதானத்திலேயே, அன்று அவரை கேலி செய்த அதே ரசிகர்களே தற்போது ‘ஹர்திக் ஹர்திக்’ என்று முழங்கி அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்த தருணம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…