தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற 5 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னை நோக்கி வந்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார்.
அன்மையில் உலகமே அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியாவில் பரவிய கட்டுக்கடங்கா காட்டுத் தீக்கு பல உயிர்கள் பலியாகியது.மேலும் பலத்த சேதத்தை அந்நாடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஆஸ்திரேலியா காட்டுக்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்று விளையாடும் போட்டியானது மெல்பர்னில் இன்று நடந்தது.இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியினுடைய பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.
இப்போட்டி நடக்கின்ற இதே மைதானத்தில் தான் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்து அணியோடு விளையாட உள்ளது. இந்நிலையில்ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி, சச்சினை ஒரு ஓவர் விளையாட வருமாறு அழைத்துள்ளார் இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்
எல்லிஸின் இந்த கோரிக்கையை உடனே ஏற்ற சச்சின் 51/2 ஆண்டு கழித்து மைதானத்தில் களமிரங்கினார் என்ன நீல உடையில்லை அவ்வளவு தான். களமிரங்கிய சச்சின் எல்லிஸ் பெர்ரி வீசிய முதல் பந்தை தனேக்கு உரிய ஷாட்டில் பவுண்டரிக்கு விரட்டினார்.
நீண்ட நாள்களுக்கு பின் மைதானத்தில் சச்சினை பார்த்த ரசிகர்கள் பரவசமடைந்தனர்.அதிலும் அவருடைய ஷாட்டை பார்த்து அட..அட இத தான் காணம இத்தன நாள் இருந்தோம்.. அல்லுதே..தலைவரே என்று புகழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…