IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தான் கேப்டனாக களமிறங்கிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெற்றியை ருசித்து இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக தனது வெற்றி பயணத்தை கனக்கச்சிதமாக தொடங்கி இருக்கிறார் என்று ரசிகர்களும் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த கருத்து படி பார்க்கும் போது மிகவும் சிறப்பான ஒரு கேப்டனாக திகழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. இவர் 2019-ல் சென்னை அணிக்காக 50 லட்சத்திற்கு வாங்கப்பட்டார், ஆனால் அந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு 2020-ல் சென்னை அணிக்கு களமிறங்கிய கடைசி 3 போட்டிகளில் தொடர்ந்து 3 அரை சதங்களை விளாசி அசத்தினார்.
அதனை தொடர்ந்து 2021 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் அதிக ரன்கள் அடித்து ஆரஞ் தொப்பியையும் தட்டி சென்றார். அந்த ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக வெல்வதற்கு பெரும் பங்களிப்பை அளித்திருந்தார். 2021 -2022 ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடியாக விளையாடி அந்த தொடரில் 603 ரன்களை குவித்தார்.
அதன் பிறகு கடந்த வருடம் ஆசிய விளையாட்டு தொடரில் இளம் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று தங்க பதக்கத்தை தட்டி தூக்கினார். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் சிஎஸ்கே நிர்வாகமும், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்பது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…