Ruturaj Gaikwad and ms dhoni [file image]
IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. நாளை ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளத. அதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.
இது வரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி மட்டுமே செயல்பட்டு வந்தார். கடந்த 2020, ஆண்டில் கூட ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த தொடரில் விளையாடிய சென்னை அணி மிகவும் மோசமாக செயலப்பட்டது. அதன் பிறகு தொடரின் இரண்டாம் பாதியில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமனம் செய்யப்பட்டார்.
அதன் பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் வரையில் சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது ருதுராஜ் சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. MS தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா என்ற வருத்தமும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ருதுராஜ் தலைமை தாங்கி நடத்தி சென்று இந்திய அணியை தங்க பதக்கம் வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…