IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. நாளை ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளத. அதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.
இது வரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி மட்டுமே செயல்பட்டு வந்தார். கடந்த 2020, ஆண்டில் கூட ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த தொடரில் விளையாடிய சென்னை அணி மிகவும் மோசமாக செயலப்பட்டது. அதன் பிறகு தொடரின் இரண்டாம் பாதியில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமனம் செய்யப்பட்டார்.
அதன் பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் வரையில் சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது ருதுராஜ் சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. MS தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா என்ற வருத்தமும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ருதுராஜ் தலைமை தாங்கி நடத்தி சென்று இந்திய அணியை தங்க பதக்கம் வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…