கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது.
துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் பட்டேல் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு ஆடிய விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் கொல்கத்தாவின் பந்துகளை சரமாரியாக விளாசி தள்ளினர். விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும் டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின் 31 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பந்தை வீணாக்காமல் தங்கள் பங்கிற்கு ரன்களை விளாசிவிட்டு சென்றனர். ராபின் உத்தப்பா 25 பந்துகளில் 33 ரன்களும் நிதிஷ் ரானா 23 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இறுதியாக கடைசியில் 17 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆன்ட்ரு ரஸல் களத்தில் வந்து இறங்கினார். அவர் வந்து இறங்கியவுடன் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தார். அவர் வெறும் 13 பந்துகளை பிடித்து 48 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர்களும் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர்களில் 5 பந்துகள் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…