ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சந்தித்தது. மேலும் இந்த வெற்றின்மூலம் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்ற 63-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டோரா வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள்.
இதில் டி காக் 7 ரன்கள் அடித்து வெளியேற, அவரையடுத்து கே.எல்.ராகுல் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்கள். பின்னர் களமிறங்கிய பதோனி டக் அவுட் ஆகா, அவரைதொடர்ந்து 2 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியா தனது விக்கெட்டை இழந்தார். சிறப்பாக ஆடிவந்த தீபக் ஹூடா அரைசதம் விளாசி 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த வெற்றின்மூலம் ராஜஸ்தான் அணி, புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…