தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.
இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.மயங்க் அகர்வால் 10,புஜாரா 0 ,கோலி 12 ரன்களில் வெளியேறினார்கள்.இதனை தொடர்ந்து ரகானே மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.
தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.இது இவருக்கு 6-வது சதம் ஆகும். ரோகித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2000 ரன்களையும் எட்டியுள்ளார் ரோகித். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி தனது 3வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.தற்போது வரை இந்திய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…