உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்து உலகக் கோப்பை தொடரில் வெளியேறியது.
இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்திய அணியில் சலசலப்பும் ஏற்பட்டது.இதை தொடர்ந்து கேப்டன் கோலிக்கும் , துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கும் சில வீரர்கள் ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியானது.
உலகக்கோப்பை தொடரின் போது கேப்டன் கோலி , துணை கேப்டன் ரோஹித் சில ஆலோசனைகளை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித் கேப்டனாக பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த மூன்று வித போட்டிகளிலும் கோலி கேப்டன் என பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் ரோஹித் இன்ஸ்டாகிராமில் கோலியை அன்ஃபாலோ செய்தார். இந்த செயலை பார்க்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னையின் வெளிப்பாடு என கூறப்படுகிறது.
நேற்று கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவையும் ரோஹித் அன்ஃபாலோ செய்தார்.ஆனால் அனுஷ்கா ஷர்மா ரோஹித் மற்றும் அவர் மனைவியை அன்ஃபாலோ செய்யவில்லை. இந்நிலையில் இன்னும் கோலி ரோஹித்தை பின்தொடர்கிறார்.
இதுபோன்ற செயல்களால் அவர்களுக்குள் பிரச்னை இருப்பதாக தகவல் கிளம்பினார். இந்நிலையில் ரோஹித் அன்ஃபாலோ செய்த பிறகு அனுஷ்கா ஷர்மா தனது ஸ்டேட்டஸில், “பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” என கூறியிருந்தார்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…