உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி , நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் தோல்விடைந்து வெளியேறியது.அதன் பிறகு அணியில் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் கேப்டன் கோலி ரோஹித் ஷர்மாவின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் அதனால் இந்திய அணி இரண்டு குரூப்பாக பிரிந்ததாக கூறப்பட்டது.
மேலும் குறுகிய ஓவர் போட்டிகளில் கேப்டன் கோலி நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை நியமிப்பதாக தகவல் வெளியானது.ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ள அனைத்து போட்டிகளுக்கும் கோலி கேப்டன் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கும் ,ரோஹித் ஷர்மாவிற்கும் எந்தவிதமான பிரச்சனை இல்லை எனவும் இப்படி சொல்லுபவர்களுக்கு என்ன லாபம் வரப்போகிறது என்று தெரியவில்லை என கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் விளையாட உள்ள தொடருக்காக இந்திய அணி மியாமி செல்லும் முன் கோலி ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை இதனால் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ?அப்போது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை உண்மைதான் என கருத்துக்கள் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விராட் கோலி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை அதனால் மீண்டும் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ? கேட்க தொடக்கி உள்ளனர்.
அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார்.அதில் ரோஹித் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் , ரிஷாப் பந்த் ஆகியோர் இருந்தனர்.ஆனால் அதில் விராட் கோலி இல்லை இதனால் இந்திய அணியில் பிளவு இருப்பது உண்மை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…