காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர், நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதனைதொடர்ந்து கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அணியின் இடம்பெறாதது, ரசிகர்களிடையே பெருமளவில் ஏமாற்றத்தை அளித்தது. இந்தநிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த யாக்கர் மன்னன் T.நடராஜன் அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…