#BREAKING : இந்திய அணிக்கு பின்னடைவு-நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

Published by
Venu

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி நேற்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தினார்.

இப்போட்டியில் முதலில்  களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் ஸ்காட்  2 விக்கெட்டை பறித்தார்.164 ரன்கள் இலங்குடன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினர் . சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மா அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்த போது இடது காலின் பின் பகுதியில் தசையில் பிடிப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிக்சை கொடுக்கப்பட்டது. இதையெடுத்து ரோஹித் ஷர்மா மூன்று பந்துகள் பிடித்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.இதன் பின்னர் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது  ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.எனினும் இந்திய அணி இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.டி20 தொடர் முடிந்த நிலையில் வருகின்ற 5 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.ஒருநாள் தொடரை தொடர்ந்து 2 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

21 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

56 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

59 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago