அரையிறுதியில் அதிரடி பேட்டிங்.! ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா.!

Published by
செந்தில்குமார்

IND vs NZ: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது, இன்று நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன.

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணியில் முதலில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடும் வகையில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.

ரோஹித் ஷர்மா பவர் பிளேவில் அதிரடியாகவும் கவனமாகவும் விளையாடி சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளைக் பறக்கவிட்டார். சுப்மன் கில் நிதானமாக விளையாடி வருகிறார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா 8.2-வது ஓவரில் டிம் சவுத்தி வீசிய பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்திருந்தாலும் அதே நேரத்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். இது அவரது சாதனைகளுக்கு வழிவகுத்தது. அதன்படி, 4.2 வது ஓவரில் போல்ட் வீசிய பந்தை, மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டு சிக்ஸரை அடித்தார்.

ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள்

இந்த சிக்ஸரை அடித்ததன் மூலம், நடப்பு உலகக்கோப்பையில் 27 சிக்ஸர்களைப் பதிவு செய்த ரோஹித் ஷர்மா, ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால், ஒரே உலக கோப்பைத் தொடரில் 26 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். நடப்புத் தொடரில் 28 சிக்ஸர்களை அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள்

2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெய்ல் 26 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்த ரோஹித் சர்மா, மற்றொரு சாதனையாக உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதிலும் உலகக் கோப்பையில் 49 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களைத் தொடர்நது ரோஹித் சர்மா, உலகக்கோப்பையில் மொத்தமாக 51 சிக்சர்களை அடித்துள்ளார்.

அதிவேகமாக 1500 ரன்கள்

மேலும், நியூசிலாந்துக்கு எதிராக அரைசதத்தை தவறவிட்டாலும், உலகக் கோப்பை அரையிறுதியில் 47 ரன்கள் எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மா, உலக கோப்பையில் அதிவேகமாக 1500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் உலக கோப்பையில் அதிவேகமாக 1500 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 minutes ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

26 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

3 hours ago