ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், ஒருநாள் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என இணையத்தில் தகவல் வெளியாகின.

ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்கா தொடரின்போது ஓய்வு எடுப்பதன் மூலம் கோலி தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என முன்னாள் கேப்டன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட தயாராக உள்ளேன். ஓய்வு எடுக்க ஒருபோதும் நான் விரும்பியது இல்லை. ரோஹித் சர்மா தலைமையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் தொடரின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதாக தேர்வுக்குழுவினர் கூறினர். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதையே 2 ஆண்டுகளாக கூறி வருகிறேன். மறுபடியும் அதையே கேள்வியாக எழுப்புவது சோர்வை அளிக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் திறனை மிஸ் செய்வோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வு குறித்து ஆலோசிக்கப்ட்ட பின்பு, ஒருநாள் அணிக்கு நான் கேப்டன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் என்னிடம் கூறினார்.

டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில், அப்படி யாரும் என்னிடம் என விராட் கோலி தெரிவித்தாக கூறப்படுகிறது. கேப்டனாக இல்லாமல் அணி வீரராக தயார் என ஏற்கனவே தேர்வுக்குழுவிடம் கூறிவிட்டேன்.

வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் கேளுங்கள் என ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக நீடிக்க கோலி விரும்பவில்லை என கங்குலி கூறிய நிலையில், விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

36 minutes ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

1 hour ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

2 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

3 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

4 hours ago