இது நல்லா இருக்கே! உள்ளூர் போட்டியில் ரோஹித் மற்றும் கோலி? கம்பீர் அதிரடி முடிவு!

Published by
அகில் R

மும்பை : இந்திய அணி, இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் தோல்விக்குப் பிறகு அடுத்ததாக வரும் செப்டம்பர்-19ம் தேதி வங்கதேச அணியுடனான தொடருக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வகையிலான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் மற்றும் அதிரடி வீரரான விராட் கோலி இருவரும் உள்ளூர் தொடரான துலிப் ட்ராபியில் பங்கேற்று விளையாட உள்ளதாக முடிவு செய்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த முடிவை பயிற்சியாளரான கம்பீரின் பரிந்துரையில் எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான இவர்கள் ஏற்கனவே தங்களது விளையாட்டின் திறனை நிரூபித்து பல சாதனைகளை தற்போதும் நிகழ்த்தி வருகின்றனர். மேலும், அவர்களது அனுபவத்தின் மூலம் தங்களால் உள்ளூர் போட்டிகள் அல்லாமல் முக்கியப் போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற முடியும் எனவும் நிரூபித்து உள்ளனர்.

அப்படி இருக்கையில் இந்திய அணியின் புதியப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், இந்திய அணியின் வீரர்களை துலிப் ட்ராபியில் விளையாட வேண்டும் என பரிந்துரைச் செய்திருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

இந்திய அணியில் ரோஹித், விராட் மட்டும் அல்லாமல் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குல்தீப் யாதவ் என பிற வீரர்களும் துலீப் ட்ராபி தொடரில் விளையாட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். அதிலும் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவிற்கு மட்டும் விளக்கு அளித்துள்ளதாக கூறி வருகின்றனர்.

இந்திய அணியின் மூத்த வீரர்காளான ரோஹித், கடந்த 2015-ம் ஆண்டு கடைசியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். அதே போல கோலியும் கடந்த 2012-ம் ஆண்டு தான் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாடி இருந்தார். அதன் பிறகு இருவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. தற்போது, கம்பீரின் பரிந்துரையால் இருவரும் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் களம் காண உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

3 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago