கிறிஸ் கெயிலை ரிடையர்ட் ஆகவேண்டாம் என்று பஞ்சாப் அணியின் இளம் வீரர்கள் கூறியுள்ளார்கள்.
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 177 ரன்கள் அடித்துள்ளார். அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் என பல சாதனைகளை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மிகவும் அதிரடியாக மந்திப் சிங் மற்றும் கிறிஸ் கெயில் விளையாடினார்கள். ஆம் மந்திப் சிங் 56 பந்துகளில் 66 ரங்களும் கெயில் 29 பந்துகளில் 51 ரங்களும் அடித்தனர். இதன் காரணமாகவே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய கிறிஸ் கெயில் கூறியது ” நான் சிறப்பாக ஆடினேன் என்று உணர்கிறேன். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னை ரிடையர்ட் ஆக வேண்டாம் என்று கூறினார்கள்” என்று கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…