ரிடெயினை 8 வீரராக உயர்த்த வேண்டும் ..!! பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுக்கும் ஐபிஎல் அணிகள் ..!

Published by
அகில் R

IPL Auction : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ரிடெயின் செய்யும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் பிசிசிஐக்கு சில ஐபிஎல் அணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் அதற்கான மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் போன்ற நிகழ்வுகளின் படி அணியில் வீரர்களை எடுப்பார்கள். அதிலும் மெகா ஏலம் என்றால் அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு அப்படி பட்ட மெகா ஏலம் இந்த வருடத்தின் கடைசியில் நடைபெற உள்ளது.

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ஒரு ஐபிஎல் அணியில் நான்கு வீரர்களைத் தக்கவைத்து (Retain) கொள்ள ஏலத்தின் விதிப்படி அனுமதிக்கப்பட்டது. மேலும், ஒரு வீரரை ‘ரைட் டு மேட்ச்’ (ஆர்டிஎம்) என்ற அட்டையைப் பயன்படுத்தி திரும்ப வாங்கலாம். இந்த விதி ஒரு அணியில் மொத்தம் ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளும் வாய்ப்பை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது, இதில்  அதிகபட்சமாக ஒரு ஐபிர்கள் அணிகள் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

தற்போது, இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன மாற்றம் என்றால் ஒரு அணியில் ஐந்து வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி ஒரு அணியில்  8 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற நிலை வர வேண்டும் என்பது தான். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இளம் வீரர்களின் ஆதிக்கம் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

இதனால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் அந்த வீரர்களை தக்க வைப்பதற்காக இந்த தீர்மானத்தை செய்ய வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிந்துள்ளது. இதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு நடைபெற இருக்கும் ஏலத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதை பிசிசிஐ அதிகார பூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

33 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

44 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

57 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago