பிளே-ஆப் கனவு? – சென்னைக்கு ஒரு வாய்ப்பு???

ஐபிஎல்2020: இன்று ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டம் அபுதாபில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது பலத்தை நிருபித்து வருகிறது.
ஆனால், சென்னை அணி மட்டுமே இந்த வருடம் ஜொலிக்க தவறியது. ஆம், சென்னை அணி ஆடிய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும், சென்னை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து விட்டது என்று எண்ண வேண்டாம் சென்னைக்கு ஒரு இறுதி வாய்ப்பு ஒன்று உள்ளது.
இனி வரும் 4 போட்டிகளில் அதிக ரன்ரேட் எடுத்தால் பிளே ஆப் செல்லும். எவ்வாறு என்றால் கடந்த 2009ல் டெல்லி 14புள்ளிகள் மட்டுமே பெற்று நுழைந்த்து. அதே போல் 2010 சென்னையும், 2014 மும்பை அணியும், 2018 ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
2019ல் 12 புள்ளிகளை மட்டுமே பெற்று ஐதராபாத் அணி பிளே ஆட் சுற்றுகள் சென்றது. இதனால், சிஎஸ்கேக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் நோக்குகின்றனர்.