#IPL2022: டாஸ் வென்ற பெங்களூர்.. ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

Default Image

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸிஸ், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஃபாப் டு பிளெஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வானிது ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்