#IPL2022: தினேஷ் கார்த்திக் அதிரடி.. 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர். 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு ப்ளஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள்.

இவர்களின் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, 25 ரன்கள் எடுத்து டு ப்ளஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து 26 ரன்கள் எடுத்து அனுஜ் ராவத் வெளியேற, பின்னர் களமிறங்கிய கோலி, டேவிட் வில்லே, ருதர்போர்டு, சொற்ப ரன்கள் அடித்து வெளியேறினார்கள். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷபாஸ் அஹமது – தினேஷ் கார்த்திக் கூட்டணியின் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது.

பின்னர் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஷபாஸ் அஹமது தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக பெங்களூர் அணி, 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் அதிகபட்சமாக ஷபாஸ் அஹமது  45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்