ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மறுமுனையில் டேவிட் வார்னர் வெளுத்து வாங்க, 66 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 14 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரிசப் பந்த் சிறப்பாக ஆட, மறுமுனையில் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. அதேபோல டெல்லி அணி, 8-ம் இடத்திற்கு பின்னேறியது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…