#IPl2022: 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.

இதில் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மறுமுனையில் டேவிட் வார்னர் வெளுத்து வாங்க, 66 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 14 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரிசப் பந்த் சிறப்பாக ஆட, மறுமுனையில் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. அதேபோல டெல்லி அணி, 8-ம் இடத்திற்கு பின்னேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்