மீண்டும் பெங்களுர் அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்புமா பஞ்சாப் ?

Published by
Venu

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது. 

இன்று நடைபெறும் 31- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,ஷார்ஜாவில் உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கனவே மோதியுள்ளது.ஆனால் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்தது.அபாரமாக விளையாடிய ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் அடித்தார்.இதனையடுத்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே அடித்தது.பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்கள் பின்ச் 20 ரன்கள் ,வில்லியர்ஸ் 28 ரன்கள் ,கோலி 1 ரன்கள் மட்டுமே அடித்தனர்.பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஆனால் புள்ளிகள் பட்டியலை பொருத்தவரை பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் 3 -வது இடத்தில் உள்ளது.7 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூர் அணி 5 வெற்றிகள் , 2 தோல்வி அடைந்துள்ளது.பெங்களூர் அணியின் 2 தோல்விகள் ஓன்று பஞ்சாப் அணியுடன் ஆகும்.மற்றொன்று டெல்லி அணியுடன் நடைபெற்ற போட்டி ஆகும்.இந்த போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 196 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 137 ரன்கள் மட்டுமே அடித்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணி 7 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் ஒரு வெற்றி , 6 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.பெங்களுர் அணியுடன் கிடைத்த வெற்றியை பஞ்சாப் அணிக்கு மற்ற அனைத்தும் போட்டிகளும் தோல்வி தான்.கடைசியாக கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. ராகுல்,அகர்வால் சிறப்பாக விளையாடியும் , அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக விளையாடவில்லை.ஆகவே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

 

Published by
Venu

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

20 hours ago