RCB vs GT: டாஸ் வென்றது குஜராத் அணி..! முதலில் பந்துவீச்சு தேர்வு..!

RCB vs GT PoF

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs GT போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.

ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்று படிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிளேஆப்-க்கு செல்லும் நான்காவது அணி யார் என்பது இன்று தெளிவாகிவிடும். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி ஏற்கனவே பிளேஆப் சென்றுவிட்ட நிலையில், பெங்களூரு அணியின் பிளேஆப் வாய்ப்பு இந்த போட்டியின் மூலம் தெரியவரும். ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்கு சென்று விடும் என்பதால் இன்று கடுமையாக போராடும்.

குஜராத் அணியும் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்றுள்ளது, பெங்களூரு அணிக்கு எந்தவிதத்திலும் எளிதாக இல்லாமல் கடும் சவால் விடுக்கும் வகையில் பேட்டிங் மற்றும் பவுலிங் கொண்ட அணியாக திகழ்கிறது என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

பெங்களூரில் மழைபெய்ததால் டாஸ் போடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதும் இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்