விராட், ஏபிடி காட்டடி! கொல்கத்தாவிற்கு இமாலய இலக்கு!
- கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்துள்ளது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது.
துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் பட்டேல் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு ஆடிய விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் கொல்கத்தாவின் பந்துகளை சரமாரியாக விளாசி தள்ளினர். விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும் டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்துள்ளது.