#IPL2022: இறுதி ஓவரில் 23 ரன்கள்.. பெங்களூர் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 169 ரன்கள் குவித்துள்ளது. 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடையப்பெற்று வரும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள்.

நிதானமாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து படிக்கல் களமிறங்கினார். அவருடன் பட்லர் இணைந்து சிறப்பாக ஆடினார்கள். அதிரடியாக ஆடிவந்த படிக்கல், 37 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர் பட்லருடன் இணைந்து அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹெட்மயர், பட்லருடன் இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். கடைசி ஓவரை ஆகாஷ் தீப் வீச, அந்த ஓவரில் ஹெட்மயர், பட்லர் என இருவரும் அடித்து விளாசினார்கள். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தனர். 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

44 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

4 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago