#IPL2022: பந்துகளை “ஸ்கை”-யை நோக்கி பறக்கவிட்ட சூரியகுமார் யாதவ்.. 152 ரன்கள் இலக்கு!

Default Image

ஐபிஎல் தொடரின் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இதில் பெங்களூர் அணி, 152 ரன்கள் அடித்தால் வெற்றிபெறும்.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள்.

இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக அடிவர, 26 ரன்கள் அடித்து ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ப்ரேவிஸ் களமிறங்க, 8 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்க, அவரையடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கொர் 120-ஐ தாண்டுமா என்ற சூழல் உருவானது. அப்பொழுது சூரியகுமார் யாதவ் தனது அதிரடியாக ஆட்டத்தை காட்ட தொடங்கினார்.

18-வது ஓவரை முஹமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் சூரியகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் சூரியகுமார் யாதவ் 21 ரன்கள் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தற்பொழுது 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்