#Breaking : மீண்டும் அதிர்ச்சியளித்த கோலி.! RCB கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகல்.!

Default Image

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக தற்போது அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அண்மையில் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி20 அணியில் ஓர் பேட்ஸ்மேன் வீரராக தொடர்வேன் எனவும் அறிவித்திருந்தார். மேலும், ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடர் கேப்டனாக தொடர்வதாக அறிவித்திருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்தேரசிகர்கள் மீளாத நேரத்தில் மேலும், ஒரு அதிர்ச்சி செய்தியாக தான் ஐபிஎல்-இல் பெங்களூரு அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் முடித்ததும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், ஓர் வீரராக பெங்களூரு அணியில் தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்