தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. – தோனி குறித்து பல்வேறு கருத்துக்களை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘ தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. ‘
‘ அவர் விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்றுள்ளார். டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் கோப்பைகள் என அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. ‘
‘ தோனி தன்னை சிறந்த விக்கெட் கீப்பராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். அவர் ஸ்டம்பிங் செய்யும் வேகம் அபாரமானது. அவர் ஸ்டம்பிங் செய்து, பெயில்ஸை தட்டி விட்டது சில சமயம் பேட்ஸ்மேனுக்கு கூட தெரியாது. அந்தளவிற்கு தோனியின் ஸ்டம்பிங் வேகமானது.’
‘ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை ஓர் சிறந்த பினிஷராக உருவாக்கி கொண்டார் தோனி. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களில் தோனி சிறப்பானவர்’ என ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் தோனி பற்றிய நினைவுகள் குறித்து சிலாகித்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…