38 அணிகள்…. இன்று 16 போட்டிகள்! தொடங்கியது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்…

Ranji Trophy 2023-24

38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன்பின், அரையிறுதி, இறுதிப்போட்டி நடைபெறும்.

டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி?

மோசமான இடத்தை பெறும் 2 அணிகள் அடுத்த சீசனில் ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும். அதுபோன்று,  ‘பிளேட்’ பிரிவில், கடந்த சீசனில் எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஐதராபாத் மற்றும் மேகாலயா, சிக்கிம், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் ‘எலைட்’ பிரிவுக்கு முன்னேறும். இந்த நிலையில், தொடக்க நாளான இன்று 16 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று குஜராத்தில் நடைபெற்று நடக்கும் போட்டியில் தமிழ்நாடு, குஜராத் அணிகள் மோதுகின்றன. காலிறுதி போட்டிகள் பிப்.23-ம் தேதியும், அரையிறுதி போட்டிகள் மார்ச் 2-ம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 10-ம் தேதியும் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter