RRvCSK
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த இரண்டாவது பந்திலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் நிதிஷ் ராணா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 21 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரை சதம் பூர்த்தி செய்தார். ஒருபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட மறுபுறம் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி வந்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி பவர் பிளே முடிவில் 79 ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணி விக்கெட்டை பறிக்க முடியாமல் சென்னை திணறி வந்த நிலையில் 8-வது ஓவரை நூர் அகமது வீசியபோது அந்த ஓவரில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் விக்கெட்டை பறித்தார். இருப்பினும் நிதிஷ் ராணா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தி வந்தார்.
இதற்கிடையில் 12 வது ஓவரின் போது நிதிஷ் ராணா இறங்கி அடிக்கும் முயன்ற போது ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் நிதிஷ் ராணா 36 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என மொத்தம் 81 ரன்கள் குவித்தார். அடுத்து களம் கண்ட துருவ் ஜூரல் 3 ரன்னிலும்,
வனிந்து ஹசரங்க 4 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் கேப்டன் ரியான் பராக் நிதானமாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகள் இழந்து 182 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டையும், நூர் அகமது, பத்திரனா தலா 2 விக்கெட்டையும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…