பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய 50-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதியது.அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் இருவரும் இறங்கினார்கள்.இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராபின் உத்தப்பா 30 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், இறங்கிய கேப்டன் ஸ்மித் – சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது.
சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களில் ரன் அவுட்டாகினார்.கடைசிவரை களத்தில் ஸ்மித் 31* , பட்லர் 22* ரன்களுடன் இருந்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…