பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய 50-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதியது.அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் இருவரும் இறங்கினார்கள்.இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராபின் உத்தப்பா 30 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், இறங்கிய கேப்டன் ஸ்மித் – சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது.
சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களில் ரன் அவுட்டாகினார்.கடைசிவரை களத்தில் ஸ்மித் 31* , பட்லர் 22* ரன்களுடன் இருந்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…