#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

Default Image

பஞ்சாப் அணிக்கு எதிரான  போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

இன்றைய 50-வது  ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதியது.அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  ராஜஸ்தான் அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் இருவரும் இறங்கினார்கள்.இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராபின் உத்தப்பா 30 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், இறங்கிய கேப்டன் ஸ்மித் – சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது.

சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களில் ரன் அவுட்டாகினார்.கடைசிவரை களத்தில்  ஸ்மித் 31* , பட்லர்  22* ரன்களுடன் இருந்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்