ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியாவுக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால், குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர்,பரிசோதனை செய்ததில் காஞ்சிபாய் சக்காரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும்,அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது.
இதனையடுத்து,சேதன் சக்காரியாவின் தந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் இன்று சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்,சேதன் சக்காரியாவின் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் சேதனின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்,கடந்த ஜனவரி மாதத்தில் சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் சக்காரியா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…