ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியாவுக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால், குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர்,பரிசோதனை செய்ததில் காஞ்சிபாய் சக்காரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும்,அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது.
இதனையடுத்து,சேதன் சக்காரியாவின் தந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் இன்று சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்,சேதன் சக்காரியாவின் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் சேதனின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்,கடந்த ஜனவரி மாதத்தில் சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் சக்காரியா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…