மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் மீண்டும் மோதியுள்ளனர்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஷமிற்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.எனவே மைதானத்தில் சலசலப்பு நடைபெற்ற நிலையில் ,தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று உள்ளது.முதலில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,இருவரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் Paper, scissors, rock? என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில்,இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம். அப்போது உங்களை பார்த்து கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாட உள்ளனர்.அந்த அணிக்கு ராகுல் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…