பயிற்சியாளராக இணைந்தார் ராகுல் டிராவிட்! ஐபிஎல் கோப்பையை முத்தமிடுமா ராஜஸ்தான்?

Published by
அகில் R

சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள்  கூடிக்கொண்டே வருகிறது. அதில் இப்பொழுதே பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.

அதன்படி, சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. அது தகவலாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது.

அதன்படி, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்துள்ளார். மேலும்,  ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் மட்டுமே 1276 ரன்கள் அடித்துள்ளார்.

ஒரு காலத்தில் ராஜஸ்தான் அணிக்கு தூணாக நின்றவர் தற்போது மீண்டும் ஒரு தூணாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் அணியில் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பெங்களூரு அணிக்காக கேப்டனாக விளையாடி வந்தார்.

அதன் பிறகு 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக விளையாடினார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் அணியில்  2015, 2016-ம் ஆண்டு ஆலோசகராக பணியாற்றினார்.

ஒரு வீரராக, ஒரு பயிற்சியாளராக கோப்பைகளை அதிகம் பார்க்காத வீரர் என்றால் அது ராகுல் டிராவிட் தான். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற தொடங்கி அவர் பதவி முடியும் காலத்தில் தான் டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டார்.

அதே போல பல வருடங்கள் ஐபிஎல் தொடர் விளையாடியும் அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதே போல, இந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருந்து ஐபிஎல் கோப்பையை வெல்வார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Published by
அகில் R

Recent Posts

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

6 minutes ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

36 minutes ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

1 hour ago

தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!

தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…

2 hours ago

செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…

2 hours ago

“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…

3 hours ago