இதனால் தான் தோற்றோம்: ராஜஸ்தான் கேப்டன் அஜிங்கியா ரஹானே பேச்சு

Default Image
  • ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 20 ஓவர்களின் முடிவில் சதம் அடிக்க அந்த அணி மொத்தம் 198 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்காக துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த விஜய் சங்கர் 15 பந்துகளுக்கு 35 ரன்கள் அடிக்க அந்த அணி 19 ஓவரில் 201 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கைத் முடித்தது.

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் அஜின்கியா ரஹானே ஆடுகளத்தில் 150 ரன்கள் அடித்தால் போதும் என்று நினைத்திருந்தோம். 190+ ரன்கள் அதிகபட்சம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போது ஆடுகளம் மந்தமாக இருந்தது. ஆனால் வார்னர் ஆடும்போது ஆடுகளம் எப்படி இப்படி மாறியது என்று தெரியவில்லை. இதுதான் எங்கள் தோல்விக்கு காரணம் என்று கூறினார் அஜின்கியா ரஹானே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்