Ruturaj Gaikwad[file image]
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகியது.
டாஸ் இடும் பொழுது பேசிய ருதுராஜ் பேட்டிங் அணியில் மாற்றம் செய்துள்ளதாக கூறினார். அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா இடம்பெற வில்லை எனவும் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் அணியில் இடம்பெறாமல் இருந்த டேரில் மிட்செல் விளையாடுவார் என கூறினார்.
இது குறித்து பேசிய அவர், “வித்தியாசமாக எதுவும் தோணவில்லை, வழக்கம் போல டாஸ்ஸை இங்கே தோற்றுள்ளேன். இந்த மைத்தனத்தில் சற்று நேரம் கழித்து ஈரத்தன்மை ஏற்படலாம் ஆனால் விளையாடும் போது தான் நமக்கு தெரியும் இந்த பிட்ச் எப்படி நம்மை ஆச்சர்யபடுத்த போகிறது என்று. அதனால் நாங்கள் ரன்களை நோக்கி முன்னேற உள்ளோம், கிடைக்கின்ற பந்தை அடித்து விளையாட தயாராக இருக்கிறோம்.
எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் அமையும் என நம்புகிறேன். மேலும், ரவீந்திரா தனது ஃபார்மில் இல்லாததால் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுத்துள்ளோம். அதனால் அவருக்கு பதிலாக அணியில் டேரில் மிட்செல் இடம் பெற்றுள்ளார்”, என்று போட்டிக்கு முன் டாஸ்ஸின் போது ருதுராஜ் கூறி இருந்தார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…