ஐபிஎல் போட்டியில் அதிவிரைவாக 50 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை ரபடா சாதித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைபெற்று வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியும் டெல்லியும் மோதியது.
பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்த போது டெல்லி வீரர் ரபடா பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவ்விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை கைப்பற்ற ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரபடா தனதாக்கி கொண்டார்.
இச்சாதனையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் 32 போட்டிகளில் 50 விக்கெட் எடுத்தார். அதே போல மும்பை அணி வீரர் லசித் மலிங்கா 33 போட்டிகளில் 50 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
மேலும் சென்னை வீரர் இம்ரான் தாஹிர் 35 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தினார்.இவர்களின் சாதனைகளை எல்லாம் ரபடா தனது 27 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
ரபடா தொடர்ந்து 23 போட்டியில் இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…