நரேன்_மலிங்கா_தாஹூரை தூக்கி தின்ற ரபடா..அசத்தல்

Default Image

ஐபிஎல் போட்டியில் அதிவிரைவாக  50 விக்கெட் எடுத்த வீரர் என்ற  சாதனை ரபடா  சாதித்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைபெற்று வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை  அணியும் டெல்லியும் மோதியது.

பரபரப்பான ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்த போது டெல்லி வீரர் ரபடா பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

இவ்விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை கைப்பற்ற ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரபடா தனதாக்கி கொண்டார்.

இச்சாதனையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் 32 போட்டிகளில் 50 விக்கெட் எடுத்தார். அதே போல மும்பை அணி வீரர் லசித் மலிங்கா 33 போட்டிகளில் 50 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

மேலும் சென்னை வீரர் இம்ரான் தாஹிர் 35 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தினார்.இவர்களின் சாதனைகளை எல்லாம் ரபடா தனது 27 போட்டிகளில் முறியடித்துள்ளார்.

ரபடா தொடர்ந்து 23 போட்டியில் இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்