முக்கியச் செய்திகள்

குயின்டன் அதிரடி சதம்..தென்னாப்பிரிக்கா அசத்தல் பேட்டிங்.! பங்களாதேஷ் அணிக்கு இமாலய இலக்கு!

Published by
செந்தில்குமார்

SAvsBAN: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது. தான் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்த போட்டியிலும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஆரம்பம் முதலே குயின்டன் டி காக் சிறப்பாக விளையாட, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதன்பிறகு விளையாட வந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் நிதானமாக விளையாடி, குயின்டனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குயின்டன் அபாரமாக விளையாடி 18வது ஓவரில் அரைசதம் அடித்து விளாசினார். இதையடுத்து, குயின்டன் பவுண்டரிகளை பறக்கவிட, நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ஐடன் மார்க்ராம் அரைசதம் கடந்தார்.

ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கையில் ஷாகிப் வீசிய பந்தில் மார்க்ராம் தனது விக்கெட்டை இழந்தார். ஹென்ரிச் கிளாசென் களமிறங்க, அபாரமாக விளையாடிய குயின்டன் பவுண்டரிகள் சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதம் அடித்தார். தொடர்ந்து குயின்டன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவருடன் இணைந்து ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாடி வர ஹசன் மஹ்மூத் வீசிய பந்தில் குயின்டன் 174 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, கிளாசெனும் சதத்தைத் தவறவிட்டு 90 ரன்களுடன் ஆட்டமிழந்தார். மில்லர் மற்றும் மார்கோ ஜான்சன் களத்தில் நின்று இறுதிவரை விளையாடினார்கள். முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 174 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 90 ரன்களும், ஐடன் மார்க்ராம் 60 ரன்களும், மில்லர் 34 ரன்களும் குவித்துள்ளார்கள். பங்களாதேஷ் அணியில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது, பங்களாதேஷ் அணி 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

8 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

9 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

10 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

11 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

12 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

13 hours ago