#SRHvPBKS: பந்துவீச்சில் திணறிய பஞ்சாப்.. ஹைதராபாத் அணிக்கு 121 ரன்கள் இலக்கு!

Default Image

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.

போட்டி தொடக்கத்திலே கே.எல்.ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து அதிரடி வீரர் கிறிஸ் கெயில் களமிறங்கினார். மத்தியில்  ஆடிவந்த மயங்க் அகர்வால் 22 ரன்கள் அடித்து வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய பூரன், ஒரு பந்து கூட ஆடாமல் ரன்-அவுட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கெயில் 17 ரன்கள் அடித்து மைதானத்தை விட்டு வெளியேற, அதனைதொடர்ந்து விக்கெட்கள் மளமளவென விழுந்தது.

இறுதியாக ஷாருக்கான் 22 ரன்கள் அடிக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். பஞ்சாப் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் கலீல் அஹமத் தலா 3 விக்கெட்களையும், அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்