#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!

Default Image

இன்றைய 38-வது போட்டியில் பஞ்சாப் Vs டெல்லி அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே பிருத்வி ஷா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் இருவரும் தலா 14 ரன் எடுத்து வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் சதம் விளாசி, 106* ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன் இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால், ராகுல் இருவரும் இறங்கினர்.

ராகுல் 15 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 29 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து, மாயங்க் அகர்வால் 5 ரன் எடுத்து வெளியேற அணி மோசமான நிலையில் இருந்தபோது ,மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் விளாசி 53 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பஞ்சாப் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்