இன்று 46-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,
நிதீஷ் ராணா இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே ராணா ரன் எடுக்காமல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், இறங்கிய ராகுல் திரிபாதி 7 ,
தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய மோர்கன், சுப்மான் கில் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த மோர்கன் அரைசதம் அடிக்காமல், 40 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாகவும், சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 57 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் பறிகொடுத்து 149 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி 150 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினர்.
நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கிறிஸ் கெயில் களமிறங்கினார். அவருடன் மந்தீப் சிங் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த இருவரும் அரை சதம் விளாசினார். அரை சதம் விளாசிய சில நிமிடங்களில் கிறிஸ் கெயில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் மந்தீப் சிங் 66 ரன்களுடன் களத்தில் நின்றார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…