உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிப்பு… தோற்கும் அணிக்கும் பல கோடி..!

Published by
murugan

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்காக ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடி இருக்கும். தோல்வியடையும் அணிக்கு வழங்கப்படும் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் இருக்கும். அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கும் தலா 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 6 கோடி) வழங்கப்படும்.

அரையிறுதிக்கு சென்ற 4 அணிகளுக்கு தலா 1 லட்சம் டாலர்கள் (83 லட்சம்) வழங்கப்படும். லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர்கள் (33 லட்சம்) வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. லீக்கில் 9 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, லீக் போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் டாலர்கள் அதாவது (33 லட்சம்) கிடைக்கும். அதேபோல அரையிறுதிக்கு சென்றதால் அதற்காக 83 லட்சம் பரிசாக வழங்கப்படும். இதை வைத்து பார்க்கும்போது இந்திய அணிக்கு தற்போது வரை 3 கோடியே 79 லட்சம் பரிசு தொகையை தங்களின் கையில் வைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் கனவாக உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி ரசிகர்களின் கனவை நிஜமாக்குமா..? இந்திய அணி பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

2 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

2 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

4 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

4 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

6 hours ago