ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசி சாதனை படைத்த பிரித்வி ஷா..!!

Published by
பால முருகன்

ஐபிஎல் வரலாறில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார். 

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டலஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படிமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து.  அதிகபட்சமாக சுப்மன் கில் 38 பந்துகளில் 43 ரன்களிலும் ஆண்ட்ரே ரசல்  28 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து இருந்தனர். அதனைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விளாசினார். டெல்லி அணி பேட்டிங் செய்யும் போது முதல் ஓவரை கொல்கத்தா அணியின் வேக பந்து வீச்சாளர் சிவம் மாவி வீசினர் அவர் வீசிய 6 பந்தையும் பிரித்வி ஷா 6 பவுண்டரிகள் விளாசி ஐபிஎல் வரலாறில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதற்கு முன்பாக அஜிங்க்கே ரஹானே கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசினார், ஐபிஎல் வரலாற்றில் முதலில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

4 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

4 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

6 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

6 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

7 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

8 hours ago