மைதானத்தில் இஷாந்த் சர்மாக்கு பரிசு வழங்கிய குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்!

Published by
Surya

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது 100-வது டெஸ்ட் போட்டியினை விளையாடி வரும் நிலையில், அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நினைவுப்பரிசினை வழங்கினார்கள்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. தற்பொழுது இந்திய அணி, தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த போட்டியை காண குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர். இந்த போட்டி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்காரணமாக போட்டி தொடங்குவதற்கு முன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா இஷாந்த் சர்மாக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

Published by
Surya

Recent Posts

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

19 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

31 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

57 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

2 hours ago