இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு..!

Published by
murugan

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி ராய்ப்பூர் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மின்கட்டண நிலுவையில் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த மைதானம் பல சர்வதேச போட்டிகளை நடத்தியது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டியை நடத்த உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றும் சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் தற்போது ஒரு தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தற்காலிக மின் இணைப்பு  பார்வையாளர்களின் கேலரி மற்றும் பெவிலியன் பெட்டியில்  மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டியின் போது மின்விளக்குகளை ஜெனரேட்டரில் இருந்து இயக்க உள்ளனர்.

இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்கட்டணம் செலுத்தாமல் இரு துறையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறைக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை மின்கட்டண நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.  2018-ம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து 3 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

2 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

4 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

5 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

7 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

8 hours ago