ஐபிஎல் விதிகளின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் கொல்கத்தா- பெங்களூர் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
அதைபோல் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அணியின் சி.இ.ஓ. காசி விஷ்வநாதன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில்இது “சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் கோச் லட்சுமிபதி பாலாஜி மற்றும் டிராவல் சப்போர்ட் ஸ்டாஃபின் ஒரு உறுப்பினருக்கும் கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் விதிகளின் படி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…